அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை குறிப்பிட்டு விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Gallery

குறித்த அறிக்கையில், ஜனநாயக கட்டமைப்பிற்குள் இணக்கமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.