Home செய்திகள் “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வலிசுமந்த கதை பகிர்வோம்

வலிசுமந்த கதை பகிர்வோம்

முள்ளிவாய்க்காலை படுகொலை வாரம் வடக்கு கிழக்கில் இன்று ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வாரம்  கடைப்பிடிக்கப் படுகின்றது.

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இறுதிக் காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித பேரவலத்தையும் கொடுமையினையும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து அமைத்து  அவற்றினை மக்களுக்கு வழங்கி முள்ளிவாய்க்கால் துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

Exit mobile version