Home செய்திகள் தமிழ்த் தேசத்தின் கரிநாளான இன்று முள்ளிவாய்க்காலில் அணிதிரள்வோம்- சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு

தமிழ்த் தேசத்தின் கரிநாளான இன்று முள்ளிவாய்க்காலில் அணிதிரள்வோம்- சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு

இன்று முள்ளிவாய்க்காலில் அணிதிரள்வோம்

இன்று முள்ளிவாய்க்காலில் அணிதிரள்வோம்: இலங்கையின் சுதந்திர நாள் “தமிழ்த் தேசத் தின் கரிநாள்’ எனும் தொனிப் பொருளில் இன்று முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டத்தில் அனைவ ரையும் பங்குகொள்ளுமாறு யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எமக்கான சுதந்திர தினம் அல்ல. எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத் தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும்? பொது மக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்றுகூடி இந்தக் கறுப்பு நாளை அனுஷ்டிக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநா ளாக அனுஷ்டித்து வந்துள்ளனர்.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள் ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசி யல் பின்னணியில் அரசியல் நோக் கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண் டும். இதில் மதகுருமார்கள், பல்கலைக் கழக மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், மாதர் சங்கங் கள், விளையாட்டுக் கழகங்கள், தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சி கள் என்பன பங்கேற்க வேண்டும். எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகின்றது என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக் கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பா ளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரி வித்தார்.

ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம், வெற்றிக்கொண்டாட்டம், மகிழ்ச்சி என் பன காணப்படும்போது இன்னொரு புறத்தில் கவலை, வறுமை, பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின் றன. இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஷ்டிக்கிறோம் என்று மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிக ரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனு மதிப்பத்திரமே சுதந்திர தினமாகும். 1956 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படு கொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்கு முறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட் டன. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப் பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் நம்மை ஒடுக்குகிறார்கள் என்று சமூக விஞ்ஞான ஆய்வு மையத் தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகள் பிரச்சினை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான தீர்மானங் கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இன்று தனித்தனித் போராட்டங் களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க் காலில் அனைவரும் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என்று குரலற்ற வர்களின் குரல் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் முருகையா கோமகன் தெரி வித்தார்.

துக்கத்தை வெளிப்படுத்தும் வகை யில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன் வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version