Tamil News
Home செய்திகள் ‘ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க சட்டப்பூர்வ தீர்வு’அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

‘ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க சட்டப்பூர்வ தீர்வு’அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

தமிழகத்தில் வசிக்கும் அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கு சட்டப் பூர்வ தீர்வு காணப்படும் என்றார் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான்.

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டிலுள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களின் வசதிகள், அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 108 ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுமட்டுமின்றி காவல்துறையில் பதிவு செய்துவிட்டு, முகாம்களைவிட்டு வெளியே வசிக்கும் நிலையில் 13,553 குடும்பங்கள் உள்ளன.

Exit mobile version