Home செய்திகள் நாட்டு பற்று இருந்தால் உடனடியாக கோட்டாபய பதவி விலக வேண்டும்-தேசிய விடுதலை மக்கள் முண்ணனி

நாட்டு பற்று இருந்தால் உடனடியாக கோட்டாபய பதவி விலக வேண்டும்-தேசிய விடுதலை மக்கள் முண்ணனி

கோட்டாபய பதவி விலக வேண்டும்

ராஜபக்ச  குடும்பத்துக்கு நாட்டு பற்று இருந்தால் கோட்டாபய பதவி விலக வேண்டும். உடனடியாக பதவி விலகி நாட்டை தகுதியானவர்களிடம் கையளிக்க வேண்டும் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முசம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (4) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6.9 மில்லியன் மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய அரசு இரண்டரை ஆண்டுகளுக்குள் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் ஆட்சியை கைவிட்டு வீட்டுக்கு செல்லும்படி தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்பட்டு  வருவதை இந்த அரசாங்கம் முழுமையாக ஏற்று ஆட்சியை விட்டு விலக வேண்டும். தங்கள் பிழைகளை ஒப்புக்கொள்ளாது  அடம்பிடித்து நாட்டை ஆட்சி செய்ய முயன்றால் ராஜபக்ஷ குடும்பம் முழுமையாக இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் பாரிய ஒரு துரோகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version