சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகராசா பிரபா என அடையாளம் காணப் பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், 27 1/2 அங்குல நீளமும் 11/4 அங்குல அகலமும் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்றை வைத்திருந்ததாகவும் சிம் அட்டைகளுடன் கூடிய இரு கைத் தொலைபேசிகளை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைக் காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.