கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” திறப்பு விழாவுக்கான அழைப்பு

“கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பு – இலங்கை” நிறுவனத்தினால் ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்” என்ற பெயரில் 01/11/2022 ம் திகதி இரத்தினபுரம் கிராமத்தில்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

WhatsApp Image 2022 10 21 at 10.23.03 AM கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் "சந்தோசம் இல்லம்" திறப்பு விழாவுக்கான அழைப்பு

குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இல்லம் “வெற்றிமனை” என்ற பெயரில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 10 21 at 10.23.02 AM கிளிநொச்சி: ஆண்களிற்கான மனநல காப்பகம் "சந்தோசம் இல்லம்" திறப்பு விழாவுக்கான அழைப்பு

வெற்றிமனை,சந்தோசம் இல்லம் இரண்டிலும் உள்ள பயனாளிகளிற்கான மருத்துவ வசதிகளை  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநல பிரிவின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்கள் நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், வரும் 1ம் திகதி ஆண்களிற்கான மனநல காப்பகம் “சந்தோசம் இல்லம்”இரத்தினபுரம் கிராமத்தில்   திறந்து வைக்கப்படவுள்ளது.