கிளிநொச்சி-“போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்” போட்டி

“போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும்” போட்டி நிகழ்வு ஒன்று கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள போட்டி நிகழ்வுக்கான முன்னேற்பாடாக இந்த விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டதோடு மாணவர்கள் தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தியிருந்தனர்.