காணமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு ஜுலை முதலாம் திகதி-சட்டத்தரணி இரட்ணவேல்

காணமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு

2009ம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் மீண்டும் திகதி இடப்பட்டதன் பின்னர் இது குறித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 7 ஆம் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது.

ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி வரை நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

Tamil News