லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது- சாணக்கியன் எம்.பி

WhatsApp Image 2022 01 08 at 13.36.19 லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது- சாணக்கியன் எம்.பி

படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 41 பேருக்கும் நீதிகிடைக்கும் என எதிர்பார்ப்பது கடினம்’ என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,“கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பத்திரியையாளர்களை  அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல மூத்த ஊடகவியலாள்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து, “நீங்கள் இவ்வாறான வேலைகளை தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையில் இருந்து நீக்கவேண்டிவரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம.

2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த பேட்டி ஒன்றை பார்த்திருந்தேன்  அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.

எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை.ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.

எனவே ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். லசந்த மடடுமல்ல 41 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை காவல்துறையிரால் லசந்த கொலை தொடார்பாக வழக்கு தொடரவில்லை. இருந்தபோதும்  நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதை திருப்திகரமான முடிவை  எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடையம்.
எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்” என்றார்.

Tamil News