இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு

இவ்வருட இறுதிக்குள் சுமார்  5000 இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைக்குமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 3,000 இலங்கை தொழிலாளர்கள் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பல்லாயிரம் இலங்கையர்கள், தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.