Tamil News
Home செய்திகள் மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார் – உள்ளூர் ஊடகங்கள் தகவல்

மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார் – உள்ளூர் ஊடகங்கள் தகவல்

 ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும்  சுட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version