யாழ். உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

துப்புரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.