யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு நாள் இன்று

IMG 20221021 WA0010 யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு நாள் இன்று

இந்திய அமைதிப்படையினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேரை சுட்டுப் படுகொலை செய்தனர்.

அந்த கொடூர சம்பவத்தின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.