Home செய்திகள் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

 கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

கண் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் இத் தகவலை தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அத்துடன் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version