யாழ். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவ 4) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  மகளிர் அணியினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.