Tamil News
Home செய்திகள் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று  இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version