யாழ். மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் :இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் ஆய்வு

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்று  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்குச் சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினை தொடர்பிலும் அவர் மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேவேளை மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்குச் சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், காணிகள் விடுவிக்கப்படாமை, பொதுமக்களின் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருப்பது தொடர்பிலும், அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.

இந்நி‍லையில் அவர் இப்பிரச்சினைகள் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசி  நல்லதொரு முடிவினை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.