Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்! மேலும் 28 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்! மேலும் 28 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் யாழ். மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட அன்ரிஜென் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை வரை 5 ஆயிரத்து 390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம்! மேலும் 28 பேருக்கு தொற்று

Exit mobile version