Tamil News
Home செய்திகள் யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பமான சூழல்

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக குழப்பமான சூழல்

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறித்த வீதியை சிரமதானம் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவத்தினர் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர்

இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பமான சூழல் ஏற்பட்தை தொடர்ந்து, இராணுவத்தினர் அங்கு இருந்தவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் சில மணி நேரத்தின் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியை முன்னெடுத்தனர்

அத்துடன் கோப்பாய்  காவல்துறை பொறுப்பதிகாரி இராணுவ பொறுப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்

Exit mobile version