யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதே நேரம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு செல்ல கோரி மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவரினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.