Tamil News
Home செய்திகள் யாழ். பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ். பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ். பருத்தித்துறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை, நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.

3 மாவீரர்களை மண் விடுதலை போராட்டத்திற்கு அர்ப்பணித்த தாய் ஒருவர் மாவீரரகளுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கண்ணீர் மல்க, உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இதேவேளை, நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version