Home செய்திகள் இலங்கையைச் சேர்ந்த பெண், தனது பிள்ளைகளை கொலை செய்துள்ளதாக இத்தாலி காவல்துறை விசாரணை

இலங்கையைச் சேர்ந்த பெண், தனது பிள்ளைகளை கொலை செய்துள்ளதாக இத்தாலி காவல்துறை விசாரணை

தனது பிள்ளைகளை கொலை செய்துள்ளதாக

இத்தாலி, வெரோனா பிரதேசத்தை சேர்ந்த  தாய் ஒருவர் அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் கொலை செய்த பின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த குறித்த பெண், தனது 11 வயது மற்றும் 3 வயதுடைய தனது பிள்ளைகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் அவர்களின் வீட்டில் உள்ள படுகையின் மீது கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது தொடர்பில் இத்தாலி  காவல்துறையினர்   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version