இலங்கை ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது: இந்திய அரசு வாதம்

Master இலங்கை ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது: இந்திய அரசு வாதம்

இலங்கை ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாதென இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிக ரீதியாக இலங்கைக்கு சென்றார்கள் என்றும், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் ஏதிலிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் என்றும், எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை ஏதிலிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த ஏதிலிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021