13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்-மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமென்பது சர்வதேச உடன்படிக் கையாகும்.  இந்த திருத்தச்சட்டம் நாட்டின் அரசியலமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. 3காவல்துறை, காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால், வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் பயன் கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13ஐ அமுல்படுத்த வேண்டும் – என்றார்.