Tamil News
Home செய்திகள் கொழும்பில் மீண்டும் காவல்துறையினர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்

கொழும்பில் மீண்டும் காவல்துறையினர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்

கொழும்பில் மீண்டும்  காவல்துறை பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட தாம் வீதி, செட்டித்தெரு போன்ற பகுதிகளில் தங்கியுள்ளவர்களைப் பதிவு செய்யுமாறு  காவல்துறையினரால் படிவமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உடனடியாக புறக்கோட்டை  காவல் நிலையத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பில் வினவியபோது, அவ்வாறு எந்தவித பதிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லையென புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (12.05.2023) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில்   மனோ கணேசன்  கேள்வியெழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version