முள்ளிவாய்க்கால் கஞ்சி சாப்பிட்ட காவல்துறையினர் மீது விசாரணை

2009  தமிழா்கள் மீது நடத்தப்பட்ட  யுத்தத்தின் போது உணவின்றி தவித்த மக்களுக்கு அப்போது அவர்களின் உயிர்களை பாதுகாக்க  கஞ்சி வழங்கப்பட்டது. இதனை நினைவு கூரும் வகையில் வருடந்தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதன்போது ஏ-9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி  காவல் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து  காவல்துறையினரும் பல்கலைகழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று  சாப்பிட்டனர்.

வீதி போக்கு வரத்து காவல்துறையினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி  சாப்பிடும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை  சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன.

இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு  கால்துறையினர் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.