Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஒத்திவைத்தது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11ஆம் திகதி வொசிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணம் எனத் தெரிய வருகின்றது. எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்தக் கோரும் இராஜதந்திர பேச்சுக்களை இலங்கை ஆரம்பித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதிய நிதி அமைச்சர் அலி சப்ரியும் அமெரிக்கா செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version