கிழக்கு மாகாணம் கல்முனையில் டெல்டா தொற்று தீவிரம்

கல்முனையில் டெல்டா தொற்று தீவிரம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட கல்முனையில் டெல்டா தொற்று தீவிரம்: அடைந்துள்ளது. இப்பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

கடந்த 4ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட PCR மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

18 பி.சி.ஆர் மாதிரிகளில் 17 பி.சி.ஆர் மாதிரிகள் கோவிட் டெல்டா திரிபு வைரஸ் தொற்றுக்கும் ஒரு பி.சி.ஆர் பரிசோதனை மாதிரி கோவிட் அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும், மிகவும் அச்சுறுத்தலானதும் என்பதனால் பொதுமக்கள் நிலைமையைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கல்முனையில் டெல்டா தொற்று தீவிரம்

அதே நேரம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 88வீதமானவர்களுக்கு டெல்டா வைரஸ்  இருக்ககூடிய சாத்தியம் உள்ளதாகத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  நாகலிங்கம் மயூரன், நேற்று ஒரே நாளில் 193கொரோனா  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நான்கு மரணங்களும் ஏற்றபட்டுள்ளதாகவும் அவற்றில் 10வயது சிறுவன் ஒருவன் வவுணதீவில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021