Home செய்திகள் லா பால்மா தீவில் தீவிரமடையும் எரிமலை வெடிப்பு

லா பால்மா தீவில் தீவிரமடையும் எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு

ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் கடந்த சில தினங்களாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தற்போது கும்ரே வியெகா எரிமலையின் வெடிப்பு தீவிரமடைந்து வருவதால், லா பால்மா தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்  கும்ரே வியெகா எரிமலை வெடிப்பினால் இதுவரை 350 வீடுகள் அழிந்துள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை எரிமலை வெடிப்பினால் புகை சூழ்ந்துள்ளது.

Exit mobile version