இலங்கையின் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாக இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக இந்தத் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.
Privileged to meet President @GotabayaR and PM @PresRajapaksa. In addition to developing Colombo Port's Western Container Terminal, the Adani Group will explore other infrastructure partnerships. India's strong bonds with Sri Lanka are anchored to centuries’ old historic ties. pic.twitter.com/noq8A1aLAv
— Gautam Adani (@gautam_adani) October 26, 2021
இலங்கைக்கான விஜயத்தின் போது மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு விஜயம் செய்த அவர், இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.