இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு கனடா தடைவிதிக்கலாம் என தகவல்

கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக இந்த தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.