யாழ் கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்ட இந்திய வெளியுறவு செயலாளர்

இந்திய வெளியுறவுச் செயலர்


இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையம், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை இன்று பார்வையிட்டார்.

இதையடுத்து யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையம் குறித்து   கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர்,

இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையமாக இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண நகரின் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான மண்டபமாக  அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டிடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது” என்றார்.

முன்னதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதிகளை இன்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower Tank Farms) தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் இலங்கையின் சக்தி துறைப்பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய – இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் LIOC அதிகாரிகளால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

LIOC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘Servo Pride ALT 15W-40’ஐ இந்த விஜயத்தின் போது அறிமுகம் செய்துவைப்பதற்காக LIOC நிறுவனத்துடன் இணைந்து கொண்டமை குறித்து வெளியுறவு செயலர் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021