இந்திய மீனவரின் படகு மூழ்கடிப்பு; ஒருவரை காணவில்லை! இருவர் கடற்படையால் கைது!!

இந்திய மீனவரின் படகு மூழ்கடிப்புஇலங்கைக் கடற் படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவரின் படகு மூழ்கடிப்பு; இந்திய மீனவரின் படகு ஒன்று அழிவடைந்து முழுமையாகக் கடலில் மூழ்கியுள்ளது. அதில் இருந்த மூன்று இந்திய மீனவர்களில் இருவர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

இந்திய மீனவர்களின் இரண்டு படகுகள் நேற்று யாழ். பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்புக்குள் நுழைந்த சமயம் அதனை இலங்கைக் கடற்படையினர் விரட்ட முற்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் 3 இந்திய மீனவர்கள் இருந்தபோதும் இரு இந்திய மீனவர்களை மட்டுமே கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ராஜ்கீரன் ராசு என்ற இந்திய மீனவரே காணாமப்போயுள்ளார். இன்று அதிகாலை வரை அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர் மீட்கப்படாமையால் உயிராபத்து நிகழ்ந்திருக்குமா என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகின்றது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இந்திய மீனவரின் படகு மூழ்கடிப்பு; ஒருவரை காணவில்லை! இருவர் கடற்படையால் கைது!!