பாதுகாப்பு கலந்துரையாடலை மேற்கொள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் கொழும்புக்கு வருகை

இந்திய இராணுவ அதிகாரிகள் கொழும்புக்கு வருகைபிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்லே வரவேற்றுள்ளார்.

“பிராந்தியத்தில் மிகப்பெரிய இராணுவக் கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவதே இந்திய இராணுவக் குழுவினரின் நோக்கமாகும்” என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021