இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி

நேற்று இரவு 9.10 மணியளவில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில், இரண்டு போர் விமானிகளும் மோசமான நிலையில் காயமடைந்தததால் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.