Tamil News
Home உலகச் செய்திகள் பாகிஸ்தான் மீது தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை – மூன்று விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

பாகிஸ்தான் மீது தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை – மூன்று விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 9-ம் திகதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது.  இதனால் அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த விவகாரத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணையில் மூன்று அதிகாரிகள் ஏவுகணையை தவறுதலாக செலுத்தியது தெரியவந்தது. இந்த மூன்று அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு முழுமையாக பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தவறுதலாக செலுத்தப்பட்ட இந்த ஏவுகணையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் அரசு இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version