இந்தியா: மார்ச் 15 முதல் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கக்கூடும்

அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும்

கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் வரும் மாதம் நடுப்பகுதியில் இந்தியா தொடங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் இந்திய சுகாதார அமைச்சுடன் அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறியப்படுகிறது. மார்ச் 15ஆம் திகதிக்குள் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil News