கடந்த மாதம், கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச் சாட்டில் 38 ஈழத் தமிழர்கள் மங்களூருவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், குறித்த 38 பேரையும் தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) கர்நாடக மாநில காவல் துறை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.