இலங்கை மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது-இந்திய குடியரசுத் தலைவர்

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சவால்களிலிருந்து மீண்டு வர இலங்கை மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.