இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது – ஐநாவில் இந்தியா

மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு  தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக 4 பில்லியன் டொலர் உணவு மற்றும் நிதியை வழங்குவதன் மூலம் எங்களின் சிறந்த நண்பரும் அயலருவமான இலங்கைக்கு உதவுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மோதல் ஆரம்பித்தது முதல் உணவு மற்றும் பொருட்விநியோக சங்கிலி அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளிற்கு தீர்வை காண்பதற்காக  நிதி உதவி தேவைப்படும் நாடுகளிற்கு இந்தியா உதவிகளை வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.