இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையைக் கட்டுப்படுத்த பெரியோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, 720 பேருக்கு நேற்று (16) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.