அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை

எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளமைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று   முன்னெடுக்கப்பட்டது.

அதிகரித்து வரும் எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற் றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராக பேருவளை நகர மையத் தில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் தீப் பந்தம் ஏந்தி நேற்று இரவு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமொன்றை மேற் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக் கப்பட்டது.

பேருவளை காலி வீதியில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பேருவளையில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத் திற்கு அருகில் தீப் பந்தம் ஏற்றி பேரணியாகச் சென்று சுமார் ஒரு மணிநேரம் கோசங்களை எழுப்பி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.