இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்திற்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக  பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அங்கு பல போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அதே சமயம், தமிழர்கள் பலர் அங்கிருந்து சிறிய படகுகள் மூலமாக தங்களது குடும்பத்தினரோடு கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக  தஞ்மடைந்து வருகின்றனர். கடந்த ஒரு சில மாதங்களில் இதுவரை 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 பேர்  தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அரிச்சல்முனை கடல் பகுதிக்கு பைபர் படகு மூலம் வந்திறங்கிய அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தியதைத்   தொடர்ந்து அவர்களை அகதிகள் முகாமில் தங்கவைக்க உள்ளதாக தெரிய வருகின்றது.

Tamil News