இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வட்டி வீத உயர்வு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

முதலாம் காலாண்டில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 4.3 வீதமாக காணப்பட்டதாகவும், இரண்டாம் காலாண்டில் இது 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் முழுமையான அளவில் முயற்சியான்மைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியானது 8.4 வீத பின்னடைவினை சந்தித்துள்ளது.