இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு

நிதி அமைச்சர் என்ற விதத்தில், ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு.

  • ஏற்றுமதி ஊடான பொருளாதாரம், சுற்றாடல் ஆகியவற்றை இலக்காக கொண்ட டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையிலான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • பொருட்களின் விலை குறைப்பு, நிவாரணம் போன்றவை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
  • வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடு இல்லாது போயுள்ளமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இலாபத்தை தமதாக்கிக் கொள்ள உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • உலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர் வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்க கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகின்றது.
  • முதலீட்டுக்கான சூழலை உருவாக்குவதற்கு அவசியத்தை ஏற்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • தொழிற்சங்கங்கள், தனியார் உரிமையாளர்களை உள்வாங்கி, விவசாயத்துறைக்கு தனியார் சட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்த்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, மேம்படுத்துவதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • கறுவா ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்தியேக திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அரச சேவை பிரிவுகள் குறித்து பரிசீலனை செய்வதற்கு புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
  • வரி மறுசீரமைப்பு குறித்து புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் துறையில் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் வகையில் விசேட காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
  • இரத்தினக்கல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு புதிய வலயங்களை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில்பயிற்சிளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
  • விநியோக உலகத்தின் முதல் 70 நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை கொண்டு செல்வதற்காக 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்திற்கு விநியோக சேவை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை தயாரித்தல் மாத்திரமன்றி, இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • 18 வருட சேவை காலத்தை நிறைவு செய்த படையினருக்கு ஓய்வூதியத்தை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • வரி அறவீடுகளை அதிகரிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. வட் வரி அதிகரிப்பு கட்டாயம் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வரி அதிகரிப்பின் ஊடாக பணம் அச்சிடுவதை நிறுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.