இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் -IMF நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிலைமை களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதித்து தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.