சட்டவிரோத பயணம்: நாடுகடத்தப்பட்ட இருவர் CID அதிகாரிகளால் கைது

படகு மூலம் பிரான்ஸுக்கு சொந்தமான ரீயூனியன் தீவை அடைந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இருவர் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக ஜப்பானுக்குள் நுழைந்து அங்கு 11 வருடங்கள் வாழ்ந்து வந்த ஒருவரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மூவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது கைது செய்துள்ளனர்.