IDH இலிருந்து தப்பிய கொரோனா நோயாளி; இராணுவப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல குழுக்கள் தேடுதல்

அங்கொடை IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் காவற்துறை பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல பொலிஸ் குழுக்கள் இவரைத் தேடி தற்போது அவசரமாகக் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது முடங்கிப்போயுள்ளதாகவும் காவற்துறை அடையாளப்படுத்தியுள்ளது.

போதை பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை அடையாளம் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0718591017,0718592290,0718591864 அல்லது 119 தொடர்பினை மேற்கொள்ளுமாறு காவற்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிந்திக் கிடைத்த செய்தி

தப்பிச்சென்றவர் கொரோனா நோயாளி கைதானார்-

IDH இல் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த கொரோனா தொற்றாளரை மீண்டும் IDH மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதை பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.