பொருளாதார நெருக்கடி நிலை எவ்வளவு காலம் தொடரும்? | சிரேஷ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் | செவ்வி | இலக்கு

பொருளாதார நெருக்கடி நிலை எவ்வளவு காலம் தொடரும்?

இலங்கை என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது எதிர்கொள்கின்றது. டொலரின் பெறுமதி 280 ரூபாவைத் தாண்டிச் சென்றுள்ள நிலைமையில், அத்தியவசியப் பாவனைப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் உயர்வடைந்திருக்கின்றது. சந்தையில் அவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. டொலர் இல்லாமையால் உருவான இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் உதவியை நாடி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லி சென்றிருக்கின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வது என்ற தீர்மானத்தை அரசாங்கம் இறுதியாக எடுத்திருக்கின்றது. மக்கள் எந்தளவுக்கு சீற்றமடைந்துள்ளார்கள் என்பதை சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணி வெளிப்படுத்தியது. இந்த நிலையில், இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள முடியும் – தவறு எங்கே இடம்பெற்றுள்ளது என்பவற்றையிட்டு அறிந்துகொள்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கத்துடன் இந்த வாரம் பேசுகின்றோம்.

நெருக்கடி நிலை